இந்திய நெல் வயல்களில் இருந்து ஆண்டுக்கு 39 கோடி டன் மீத்தேன் வாயு வெளியாகிறது. இது ஜெர்மனியின் மொத்த ஆண்டு உமிழ்வையும் மிஞ்சும் அளவில் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் மீத்தேன் வாயுவை அதிகம் வெளியிடும் முக்கிய இடங்களாக இந்தியாவின் நெல் வயல்கள் உருவெடுத்துள்ளதாக NatureFood இதழின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய நெல் வயல்களில் இருந்து ஆண்டிற்கு 39 கோடி டன் மீத்தேன் வாயு வெளியாகிறது.

paddy field
இது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ஆண்டு உமிழ்வை விடக் கூடுதலாகும். மேலும், 1961 முதல் 1980 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2011 முதல் 2020 வரை உலகளவில் நெல் வயல்களிலிருந்து வெளியாகும் பசுங்குடில் வாயு உமிழ்வு 90.4 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 110 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 55 சதவீத மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில், 1970க்குப் பிறகு நெல் சாகுபடி பரப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் 2031 முதல் 2050க்குள் இந்த உமிழ்வு மேலும் 25 சதவீதம் உயரும் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், மாற்றுப் பயிரிடுதல் மற்றும் சீரான நீர்ப்பாசனம் மூலம் மீத்தேன் உமிழ்வை 10 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறுகின்றனர்.
