இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 4-0 என இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ind vs eng bcci
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் பெத்தல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் தொடக்கத்தில் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்த குர்னூர் ப்ரார் 13வது ஓவரில் பென் டக்கெட், பெத்தல் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி இந்தியாவிற்கு விக்கெட்டை எடுத்துவந்தார்.
தொடர்ந்து வந்த இன்ஃபார்ம் வீரர் ஹாரி ப்ரூக்கை பும்ரா அற்புதமான பவுன்சர் மூலம் வெளியேற்ற, அடுத்தடுத்து வந்த பட்லர் மற்றும் சாம் கரன் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றிய பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்துக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தார். 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பட்லர் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
19 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 88/5 என விளையாடிவருகிறது. குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
