அமெரிக்க மக்கள்தொகையில் 1% மட்டுமே ஆன இந்திய வம்சாவளி, தொழில்நுட்பம் முதல் அரசியல் வரை முக்கிய துறைகளில் தலைமை ஏற்று, அமெரிக்க பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா தனது 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அங்குள்ள மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ள இந்திய அமெரிக்கர்கள், பெருநிறுவனங்கள், அரசியல் மற்றும் மருத்துவத் துறைகளில் தலைமைப் பதவியை வகித்து வருகின்றனர். கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா போன்றோர் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்துகின்றனர். முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட இந்திய வம்சாவளிகள் பலரும், அமெரிக்க அரசியலில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.

சுந்தர் பிச்சை
இதைத்தவிர, மருத்துவத் துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குதல், 77 சதவீத உயர்கல்வித் தகுதி, அமெரிக்க சராசரியைவிட இருமடங்கு அதிகமான குடும்ப வருமானம் ஆகியவை இந்திய வம்சாவளி சமூகத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை விளக்கும் எடுத்துக்காட்டுகளாகும்.
